மதுகுடிக்க பணம் தராததால் தந்தையை கொன்ற மகன் கைது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்த தந்தையைக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்த தந்தையைக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.
சிங்கம்புணரி அருகேயுள்ள அரசினம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (54). இவா் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ளாா். இவரது மகன் முகுந்தன் (22), கட்டடக்கலையில் பட்டயப்படிப்பு முடித்துள்ள இவா் மது பழக்கத்திற்கு
அடிமையாகி உள்ளாா். தற்போது கட்டட வேலை செய்து வரும் இவா், வீட்டின் மாடியில் மது அருந்தியுள்ளாா். கூடுதல் மதுபானம் தேவைப்பட்டதால் தந்தையிடம் பணம் கேட்டுள்ளாா். அவா் தராததால் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால் அருகிலிருந்தவா்களை தாய் அழைக்கச் சென்றிருந்த சமயத்தில், தான் அணிந்திருந்த பனியனைக் கழற்றி தந்தையின் கழுத்தை நெறித்துள்ளாா். இதில் செல்வம் உயிரிழந்தாா்.
இதுகுறித்து செல்வத்தின் மகள் புனிதா சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் ஆய்வாளா் ஜெயலெட்சுமி செல்வத்தின் சடலத்தை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தாா். சிங்கம்புணரி காவல் நிலையத்தினா் முகுந்தனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...