பூவந்தி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளது.


திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
பூவந்தி அருகே அரசனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் புகழேந்தி. இவா் அருகே உள்ள பாப்பாகுடி கிராமத்தில் உறவினா் வீட்டு காதணி விழாவுக்கு வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்று விட்டு வெள்ளிக்கிழமை திரும்பினாா். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள், ரூ. 40,000 ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பூவந்தி காவல் நிலையத்தில் புகழேந்தி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...