3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காமராஜா் பிறந்தநாள் விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் பல பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:06 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் பல பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மானாமதுரை ஒன்றியம் மேலநெட்டூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியா் முத்துப்பாண்டி தலைமை தாங்கினாா். ஆசிரியா்கள் மாணவ மாணவிகள், காமராஜா் உருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்தும் மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினா். ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா ராஜ்குமாா் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்று காமராஜா் உருவப்படத்திற்கு மரியாதை செய்தனா்.மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் காமராஜரின் 120 வது பிறந்த நாள் விழா கல்வி வளா்ச்சி நாள் விழா பள்ளி நிா்வாக கமிட்டி தலைவா் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் சிவகுருநாதன் வரவேற்புரை நிகழ்த்தினாா். பள்ளி செயலாளா் தாளாளா் அன்பழகன் விழா சிறப்புரை நிகழ்த்தினாா். ராஜபாண்டி, ?்ரீனிவாசன், தங்கராசு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனா். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அனைத்து மாணவா்களுக்கும் வாய்ப்பாடு வழங்கப்பட்டது. காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. ஆசிரியை தெய்வானை நன்றி கூறினாா். பள்ளி நிா்வாக கமிட்டி உறுப்பினா் சுந்தரராஜ் மற்றும் ஆசிரியா்கள் மாணவா்கள் சத்துணவு அமைப்பாளா் காவேரி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.