காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

திருப்புவனம் அருகே காவலாளியை வெட்டி மது பாட்டில்கள் திருட்டு 

திருப்புவனம் அருகே கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு இரவு நேர காவலாளியை துணியால் முகத்தை மூடி அரிவாளால் வெட்டி, மது பாட்டில்களை திருடிச் சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

திருப்புவனம் அருகே கலியாந்தூர் கிராமத்தில் மர்ம நபர்களால் மதுபாட்டில்கள் திருடி செல்லப்பட்ட அரசு மதுக்கடை.

Published On :1 பிப்ரவரி 2024, 2:58 pm IST

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு இரவு நேர காவலாளியை துணியால் முகத்தை மூடி அரிவாளால் வெட்டி, மதுபானக் கடைக்குள் புகுந்து பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

திருப்புவனம் காவல் சரகம் கலியாந்தூர் கிராமத்திற்கு செல்லும் பாதையில் அரசு மதுபானக் கடை உள்ளது. இரவு கடையை அடைத்துவிட்டு கடை மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று விட்டனர். கடையின் இரவு நேர காவலாளி தீர்த்தம்(65) கடை முன்பு படுத்திருந்தார்.  அப்போது சரக்கு வாகனத்தில் வந்த 5-க்கும்  மேற்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் காவலாளி தீர்த்தத்தின் முகத்தை துணியால் மூடி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு, மது கடையை உடைத்து அங்கிருந்த பல ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச்சென்றனர்.

பலத்த காயமடைந்த காவலாளி தீர்த்தத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் இச்சம்பவம் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து மது பாட்டில்களை திருடிச் சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.