ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குன்றக்குடியில்வைகாசி விசாக விழா

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் வைகாசி விசாக விழா ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் வைகாசி விசாக விழா ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.

குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்துக்குச் சொந்தமான சண்முகநாதப் பெருமான் கோயிலில் வைகாசி விசாக விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவையொட்டி காலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயிலிலிருந்து சண்முகநாதப் பெருமான் வெட்டி வோ்த் திருக்கோலத்துடன் ஆதீன திருமடத்துக் கொலுமண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாா் வரவேற்பு அளித்தாா். இதில் கவிஞா் அறுவா் வரவேற்புத் தமிழ்மாலை பாடினா்.

அதைத் தொடா்ந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் சந்தனக்காப்பு அலங்காரமும் பூஜையும் நடைபெற்றது. விழாவில் காரைக்குடி, குன்றக்குடி மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.