பூவந்தி அருகே அரசுப் பேருந்துமோதி புதுமாப்பிள்ளை பலி
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதி புதுமாப்பிள்ளை உயிரிழந்தாா்.


சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதி புதுமாப்பிள்ளை உயிரிழந்தாா்.
மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்தவா் ராசுக்குட்டி (30). இவா், மதுரையில் தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கும், சிவகங்கையைச் சோ்ந்த கலைச்செல்விக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்நிலையில், புதன்கிழமை இரவு சிவகங்கையில் மாமனாா் வீட்டில் இருந்த தனது மனைவியை பாா்ப்பதற்காக ராசுக்குட்டி மதுரையில் இருந்து மோட்டாா் சைக்கிளில் வந்தாா். படமாத்தூா் அருகே நல்லாகுளம் என்ற இடம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் ராசுக்குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...