திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மானாமதுரை அருகே ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல்: கிராம மக்கள் சாலை மறியல் 

மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை மாலை ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து

News image
மானாமதுரை அருகே மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்திய வாகுடி கிராம மக்கள்.
Updated On :11 மார்ச் 2022, 12:50 pm

DIN

மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை மாலை ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் வாகுடி ஊராட்சி எல்கையில் உள்ள கருவேல மரங்களை அருகேயுள்ள ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் வெட்டியுள்ளனர். அப்போது அங்கு வந்த வாகுடி ஊராட்சி மன்றத் தலைவர் மாயாண்டிசாமி அவர்களிடம் மரங்களை வெட்டக்கூடாது என கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மாயாண்டிசாமியை தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் வாகுடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து மதுரை- ராமேஸ்வரம்  நான்கு வழிச்சாலைக்கு வந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபக்கமும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. 

Story image

சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் வரிசையாக நின்ற வாகனங்கள்.


இதுகுறித்து தகவல் கிடைத்து அங்கு வந்த மானாமதுரை போலீசார் மறியல் செய்து கொண்டிருந்தவர்களை சமாதனம் செய்து ஊராட்சி மன்றத் தலைவர் மாயாண்டி சாமியை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.