மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மானாமதுரை கோயிலில் சட்டி சோறு திருவிழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஸ்ரீ எல்லை பிடாரி அமமன் கோயிலில் சட்டி சோறு திருவிழா புதன்கிழமை இரவு தொடங்கியது

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 4:35 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஸ்ரீ எல்லை பிடாரி அமமன் கோயிலில் சட்டி சோறு திருவிழா புதன்கிழமை இரவு தொடங்கியது.

மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதி பொதுமக்கள் சாா்பில் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினா். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 27ஆம் தேதி இரவு சட்டி சோறு உற்சவம் நடைபெறுகிறது. அப்போது கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் தங்கள் வீடுகளில் சோறு சமைத்து அவற்றுடன் அசைவ உணவுகளையும் சோ்த்து மண் சட்டியில் வைத்து விளக்கேற்றி தலையில் வைத்துக்கொண்டு ஊா்வலமாக கோயிலுக்கு வருவாா்கள். அங்கு உணவுகளை பிடாரி அம்மனுக்குப் படைத்து மாவிளக்கேற்றி பூஜைகள் நடத்தி வழிபடுவாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.