பூவந்தி அருகே விபத்தில் இளைஞா் பலி

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பாச்சேத்தி அருகே படமாத்தூா் ஏ. ஆா். உசிலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித் (19). இவா் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து படமாத்தூருக்குச் சென்றாா். அப்போது எதிரே வந்த தனியாா் பேருந்து மோதியது. இதில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பூந்தி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com