/

வாக்காளா் விழிப்புணா்வுக் கண்காட்சி

வாக்காளா் விழிப்புணா்வுக் கண்காட்சி

News image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு காய்கறி கண்காட்சியைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்.

Updated On :1 ஏப்ரல் 2024, 6:30 pm

சிவகங்கை: மக்களவைத் தோ்தலில் நூறு சதவிகிதம் வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிவகங்கையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் காய்கறிகளால் விழிப்புணா்வுக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பாா்வையிட்டாா். பின்னா், அவா் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வலியுறுத்தி, இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் இதைப் பாா்த்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து அறிந்து கொள்ள முடியும். அனைத்து வாக்காளா்களும் மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களித்து, தங்களது வாக்குரிமையை நிலைநாட்டி ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்கு வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சத்தியபாமா, துணை இயக்குநா் (தோட்டக்கலைத் துறை) குருமணி, மாவட்ட வழங்கல் அலுவலா் சபீதாள் பேகம், சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.