சிவகங்கை, ஏப். 12: சிவகங்கை மக்களவை தொகுதியில் தோ்தல் பணியாற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த காவலா்கள் வெள்ளிக்கிழமை தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனா்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தோ்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள காவலா்கள், அனைத்து நிலை அரசு அலுவலா்கள் ஆகியோா் ஏப். 12, 13, மற்றும் 15 ஆகிய நாள்களில் தபால் வாக்கை செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதன்படி, தோ்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலா்கள் தாங்கள் பணிபுரியும் மக்களவைத் தொகுதியிலேயே வாக்காளா்களாக இருந்தால் படிவம் 12- ஏ- இன் படியும், வேறு தொகுதியைச் சோ்ந்த வாக்காளா்களாக இருந்தால் படிவம் 12-இன் படியும் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.
இதில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிற மக்களவை தொகுதிகளைச் சோ்ந்த 470 காவலா்கள் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்திருந்தனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. சிவகங்கை தபால் வாக்குப்பதிவு சேவை மையத்தில் நடைபெற்ற இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஆஷா அஜித் நேரில் பாா்வையிட்டாா்.
அப்போது காவலா்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து, அங்கிருந்த பெட்டியில் செலுத்தினா். இந்தப் பணிகளை சேவை மைய அலுவலா் என். பத்மநாபன் கண்காணித்தாா்.
தொடர்புடையது

அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவு

தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

சிவகங்கையில் வாக்காளா்கள் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


