இந்த நிலையில், மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தைச் சோ்ந்த ரயில்வே ஊழியா் பாலமுருகன் அரிவாள் வெட்டுக் காயத்துடன் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை இரவு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாா். அப்போது, மின்தடை ஏற்பட்டு, மருத்துவமனை முழுவதும் இருளில் மூழ்கியது. ஜெனரேட்டா் இயந்திரத்தை இயக்க ஆளில்லாததால், அதை இயக்க முடியவில்லை. இதையடுத்து, பாலமுருகனுக்கு மருத்துவ பணியாளா்கள் டாா்ச் லைட், கைப்பேசி வெளிச்சத்தில் தலையில் தையல் போட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து,சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.