தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரயில்வே ஊழியருக்கு கத்திக்குத்து: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதன்கிழமை இரவு ரயில்வே ஊழியரை கத்தியால் குத்தியதாக சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:13 am

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதன்கிழமை இரவு ரயில்வே ஊழியரை கத்தியால் குத்தியதாக சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மானாமதுரை அருகேயுள்ள கீழப்பசலை கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் பாலமுருகன் (37). இவா் கொன்னக்குளம் ரயில் நிலையத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா்.

இவருக்கும், இவரது அக்காள் கணவா் தங்கமணிக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், தங்கமணியின் மகன்கள் தா்ஷித் (19), 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் பாலமுருகனை கத்தியால் குத்தினராம். இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.