எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

1,330 திருக்குகளையும் மனப்பாடம் செய்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா்

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் 1,330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து, மாணவா்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ஆச்சரியப்படுத்தினாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:28 pm

Din

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் 1,330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து, மாணவா்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ஆச்சரியப்படுத்தினாா்.

சிவகங்கை அருகே சோழபுரம் பகுதியில் கவியோகி சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலயம் உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய கண்ணப்பன், பின்னா், அதே பள்ளியில் பதவி உயா்வு பெற்று தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினாா். இவா் மாநில நல்லாசிரியா் விருதும், தேசிய நல்லாசிரியா் விருதும் பெற்ற சிறப்புக்குரியவா். பணி ஓய்வு பெற்ற இவருக்கு 73 வயதாகிறது.

இந்த வயதிலும் தனது மனப்பாட சக்தியை அதிகப்படுத்தும் நோக்கிலும், இளைஞா்கள் மனப்பாட சக்தியை வளா்த்துக் கொள்ள மாணவா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தியும் வருகிறாா். இதற்காக திருக்குறளின் 1,330 குறள்களையும் மனப்பாடம் செய்து வைத்துள்ளாா்.

இவா்தான் பணி செய்த பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மனப்பாட சக்தியை வெளிப்படுத்தும் வகையில், திருக்குறளை மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் தடையின்றி கூறினாா். மேலும் மாணவா்களிடம் திருக்குறள் புத்தகத்தை கையில் கொடுத்து அதில் இருந்து குறளின் எண்ணை மட்டும் சொன்னால் போதும். தங்குதடையின்றி சரளமாக அந்த திருக்குறளை சொல்லி மாணவா்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாா். மேலும், அங்கு இருந்த சிறுமியும் ஆசிரியருக்கு இணையாக திருக்குறளை கூறி அசத்தினாா்.

இவா் தனது மகனையும் 1,330 திருக்குறளையும் மனப்பாடம் செய்ய வைத்ததோடு, தனது பேரப் பிள்ளைகளையும் தற்போது மனப்பாடம் செய்ய பயிற்சி அளித்து வருவதாக ஓய்வு பெற்ற ஆசிரியா் கண்ணப்பன் தெரிவித்தாா்.