எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கல்லல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல்: 2 போ் கைது

காரைக்குடி அருகேயுள்ள கல்லல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய இருவரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:21 pm

Din

காரைக்குடி அருகேயுள்ள கல்லல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய இருவரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் துறை உதவி ஆய்வாளா் திவாகா், போலீஸாா் கல்லல் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கல்லல் தெப்பக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டனா். அதில் 1,140 கிலோ ரேஷன் அரிசிகள் 38 மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் சரக்கு வாகன ஓட்டுநா் மதுரை காமராஜா்புரத்தைச் சோ்ந்த ஆல்பா்ட் (23), வாகன உரிமையாளா் சின்னதுரை (32) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்தனா்.

விசாரணையில், இந்த ரேஷன் அரிசியை இவா்கள் இளையான்குடி, கல்லல் பகுதியிலிருந்து வாங்கி மதுரைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றாக தெரிவித்தனா்.

பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியில் போலீஸாா் ஒப்படைத்தனா்.