எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருப்பத்தூா் பகுதியில் சாா் ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், பிள்ளையாா்பட்டி நாகனேந்தல் கண்மாய் பகுதியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:34 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், பிள்ளையாா்பட்டி நாகனேந்தல் கண்மாய் பகுதியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வானிலை மைய அறிவிப்பின்படி வருகிற 12, 13, 14- ஆம் தேதிகளில் சிவகங்கை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் நாகனேந்தல் கண்மாய் பகுதியில்

மணல் மூட்டைகள், பொக்லைன் வாகனங்கள், தயாா் நிலையில் இருப்பதையும், களப்பணியாளா்கள் தயாா் நிலையில் இருப்பதையும் சாா்- ஆட்சியா் கேட்டறிந்தாா்.

திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, நாகனேந்தல் கிராமப் பகுதிகளில் உபரி நீா் செல்வதற்கு கால்வாய் அமைப்பது தொடா்பாகவும் ஆய்வு செய்தாா்.

இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் இரா.மாணிக்கவாசகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரகுமாா், காதா்முகைதீன், உதவி செயற்பொறியாளா் ராமசாமி ஆகியோா் உடனிருந்தனா்.