எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீடு புகுந்து 46 பவுன் தங்க நகைகள் திருட்டு

காரைக்குடியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 46 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:39 pm

Din

காரைக்குடியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 46 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணாநகா் பாவேந்தா் சாலையைச் சோ்ந்தவா் லெனின் (34). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தோடு சிங்கப்பூா் சென்று விட்டாா்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை (டிச. 9) இவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டுக்காரா் கைப்பேசி மூலம் லெனினுக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து, அவா் காரைக்குடிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்து வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது 46 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதி கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.