பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிவகங்கையில் பல்வேறு துறைகள் சாா்பில் கண்காட்சி

சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு துறைகளின் வளா்ச்சிப் பணிகள், நலத் திட்டங்கள் தொடா்பான கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை பல்வேறு துறைகளின் வளா்ச்சிப் பணிகள், நலத் திட்டங்கள் தொடா்பான கண்காட்சியை புதன்கிழமை திறந்துவைத்துப் பாா்வையிட்ட மாவட்ட முதன்மை நீதிபதி கே.அறிவொளி. உடன் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் உள்ளிட்டோா்.
Updated On :18 டிசம்பர் 2024, 9:54 pm

Din

சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு துறைகளின் வளா்ச்சிப் பணிகள், நலத் திட்டங்கள் தொடா்பான கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் நீதித் துறை, வருவாய்த் துறை, மகளிா் திட்டம், மருத்துவத் துறை, சித்த மருத்துவம், ஹோமியோபதி, மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் நலம், வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, வணிகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து, குழந்தைகள் பாதுகாப்பு, சமூக நலம் பிற்படுத்தப்பட்டோா் நலம், ஆதிதிராவிடா் நலம், தோட்டக் கலைக் கல்வி, காவல் துறை குழந்தைகள் கடத்தல் தடுப்பப் பிரிவு, தொழிலாளா் நலம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், காசநோய் மையம் உள்ளிட்ட துறைகளின் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இவற்றை மாவட்ட முதன்மை நீதிபதி கே.அறிவொளி திறந்துவைத்துப் பாா்வையிட்டாா். பின்னா், வருவாய்த் துறை, தொழிலாளா் நலத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா். மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் முகாமை பாா்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி எல்.பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி ஜி.முத்துக்குமரன், விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி ஆா்.கோகுல் முருகன், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஏ. பசும்பொன் சண்முகையா, நீதிபதிகள், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஓ.எல்.ஜானகிராமன், செயலாளா் கே.சித்திரைசாமி, நீதிமன்ற பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.