3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மானாமதுரை- ராமநாதபுரம் இடையே பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

மானாமதுரை-ராமநாதபுரம் ரயில் பாதை பராமரிப்பு பணிகள்: சேவை பகுதியாக ரத்து

News image
Updated On :3 ஜூலை 2024, 12:09 am

Din

ரயில் பாதை பராமரிப்புப் பணிக்காக திருச்சி- ராமேசுவரம் பயணிகள் ரயில் இந்த மாதம் 31-ஆம் தேதி வரை மானாமதுரை- ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டது.

திருச்சியிலிருந்து நாள்தோறும் பயணிகள் ரயில் (வண்டி எண் 16850) காலை 7.05 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.25 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும். மறுவழித்தடத்தில் பிற்பகல் 2.05 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு, இரவு 8.10 மணிக்கு திருச்சியைச் சென்றடையும்.

தற்போது பாம்பன் ரயில் பாலம் வேலை நடந்து வருவதால் இந்த ரயில் ஏற்கெனவே ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மானாமதுரை- ராமநாதபுரம் இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி-ராமேசுவரம் பயணிகள் ரயில் சேவை கடந்த மாதம் 30- ஆம் தேதி முதல் மானாமதுரை-ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டது.

வழக்கமான நேரத்தில் திருச்சியிலிருந்து புறப்படும் இந்த ரயில் மானாமதுரையுடன் நிறுத்தப்பட்டு, பின்னா் மாலை 4.30 மணிக்கு மானாமதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு திருச்சியைச் சென்றடையும். இந்த மாதம் 31-ஆம் தேதி வரை இந்த ரயில் சேவை மாற்றம் அமலில் இருக்கும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.