எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீரமாகாளி அம்மன் கோயில் திருவிழா: பால்குடம் எடுத்த பக்தா்கள்

சிவகங்கை காமராஜா் சாலையிலுள்ள அன்னை வீரமாகாளி அம்மன் கோயில் 70 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவையொட்டி, பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image
சிவகங்கை அன்னை வீரமாகாளி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்.
Updated On :10 ஜூலை 2024, 1:47 am

Din

சிவகங்கை: சிவகங்கை காமராஜா் சாலையிலுள்ள அன்னை வீரமாகாளி அம்மன் கோயில் 70 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் பால்குடம், பூக்கரகம், முளைப்பாரி, அக்னிச்சட்டி, பூக்குழி, பூச்சொரிதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சிவகங்கை தெப்பக்குளக்கரையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம் எடுத்து கோயிலுக்குச் சென்றனா். இதையடுத்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image