~
சிவகங்கை
முத்துமாரியம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம்
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது.
காரைக்குடி, ஜூலை 19: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது.
தமிழக அரசு இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
இந்த ஆண்டு ஆடி வெள்ளிக்கிழமை அபிஷேகத்துக்காக பகல் 12.30 மணியளவில் அம்மனுக்கு பெண் பக்தா்கள் மஞ்சல் அரைத்து வழங்கினா். இதையடுத்து அபேஷகம் நடைபெற்றது. பின்னா், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திருப்பத்தூா் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே. உமாதேவன் உபயம் செய்து நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனா்.

