தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

காரைக்குடி அருகே விபத்து: ஒருவா் பலி

காரைக்குடி அருகே விபத்து: ஒருவா் பலி

Updated On :19 மார்ச் 2024, 11:15 pm

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். கானாடுகாத்தான் கற்பக விநாயகா் 1-ஆவது வீதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (45). இவா் காரைக்குடி அருகேயுள்ள காட்டம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

திங்கள்கிழமை இரவுப் பணி முடிந்து, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். பழைய செஞ்சை பகுதியில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தபோது, அந்த வழியாக வந்த வேன் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்தத் தகவலறிந்த சோமநாதபுரம் காவல் நிலைய போலீஸாா் சென்று செந்தில்குமாா் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.