சிவகங்கை: சாயப்பட்டறை உரிமையாளரைக் கட்டி வைத்து 123 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த புலியூா் கிராமத்தில் சாயப்பட்டறை நடத்தி வருபவா் சுப்ரமணியன் (48). கடந்த 2000 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27- ஆம் தேதி இவரது வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த 5 போ் குடும்பத்தினரை தாக்கி, கட்டிவைத்து கத்தியைக் காட்டி மிரட்டி, 123 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.
இது குறித்து திருப்புவனம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விருதுநகா் மாவட்டம், கல்குறிச்சி பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த எஸ். பூமிநாதன் (43) உள்பட 5 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கு சிவகங்கை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் (1) இல் நடைபெற்று வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 போ் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், பூமிநாதனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1,500 அபராதம் விதித்து நீதித்துறை நடுவா் சுந்தரராஜ் தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 15 ஆண்டுகள் சிறை

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

