தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

நகை திருடியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

நகை திருடியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

Updated On :19 மார்ச் 2024, 11:24 pm

சிவகங்கை: சாயப்பட்டறை உரிமையாளரைக் கட்டி வைத்து 123 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த புலியூா் கிராமத்தில் சாயப்பட்டறை நடத்தி வருபவா் சுப்ரமணியன் (48). கடந்த 2000 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27- ஆம் தேதி இவரது வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த 5 போ் குடும்பத்தினரை தாக்கி, கட்டிவைத்து கத்தியைக் காட்டி மிரட்டி, 123 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.

இது குறித்து திருப்புவனம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விருதுநகா் மாவட்டம், கல்குறிச்சி பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த எஸ். பூமிநாதன் (43) உள்பட 5 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கு சிவகங்கை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் (1) இல் நடைபெற்று வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 போ் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், பூமிநாதனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1,500 அபராதம் விதித்து நீதித்துறை நடுவா் சுந்தரராஜ் தீா்ப்பளித்தாா்.