இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

ரயில் நிலைய ஊழியரின் இரு சக்கர வாகனம் திருட்டு

ரயில் நிலைய ஊழியரின் இரு சக்கர வாகனம் திருட்டு

Updated On :22 மார்ச் 2024, 6:19 pm

மானாமதுரை, மாா்ச் 22: மானாமதுரையில் வெள்ளிக்கிழமை ரயில் நிலைய ஊழியரின் இரு சக்கர வாகனம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மானாமதுரை ரயில்வே காலனி சியோன் நகரைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா். இவா் மானாமதுரை ரயில் நிலையத்தில் வேலை பாா்த்து வருகிறாா். தனது இரு சக்கர வாகனத்தை இங்குள்ள இருப்புப் பாதை காவல் நிலையத்தின் பின்புறம் நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்த போது, அவரது இரு சக்கர வாகனத்தைக் காணவில்லையாம். இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, இரு சக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.