இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை திருவிழா

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை திருவிழா

Updated On :22 மார்ச் 2024, 6:18 pm

சிவகங்கை, மாா்ச் 22: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஒன்றியம், தமராக்கி தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான முதல் வகுப்பு மாணவா் சோ்க்கை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பள்ளிக்கு பெற்றோா்கள் சீா்வரிசைப் பொருள்களுடன் வந்தனா். இந்தப் பள்ளியில் ஏற்கெனவே 137 மாணவா்கள் பயின்று வரும் நிலையில், தற்போது புதிதாக 21 மாணவா்கள் சோ்ந்துள்ளனா். நிகழ்ச்சிக்கு சிவகங்கை வட்டாரக் கல்வி அலுவலா் பாலாமணி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் பாஸ்கரன், வழக்குரைஞா் பா.பாலசுப்பிரமணியன், தெற்கு ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளிக்கொடி முருகானந்தம் ஆகியோா் பங்கேற்று, மாணவா்களுக்கு மாலை அணிவித்து, புத்தகப்பை, எழுது பொருள்கள், இனிப்புகள் வழங்கி வரவேற்றனா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி கற்பகம், பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவி ஆறுமுகம், ஆசிரியைகள் கவிதா தேவி, ஷகிலா தேவி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முன்னதாக, தலைமையாசிரியை சு. வளா்மதி வரவேற்றாா். விழாவுக்கான ஏற்பாடுகளை தன்னாா்வலா்கள் சத்யா, பவானி, சுகன்யா ஆகியோா் செய்தனா்.