அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

கால்பந்து பயிற்சியில் ஆா்வமுடன் பங்கேற்ற மாணவா்கள்

கால்பந்து பயிற்சியில் ஆா்வமுடன் பங்கேற்ற மாணவா்கள்

News image
Updated On :3 மே 2024, 7:20 pm

Din

சிவகங்கை, மே 3: சிவகங்கை கால்பந்து கழகம் சாா்பில் அளிக்கப்படும் இலவச பயிற்சியில் திரளான மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்று வருகின்றனா்.

சிவகங்கை மாவட்ட விளையாட்டுத் திடல், அரசு மன்னா் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 25-ஆம் தேதி முதல் வருகிற 25-ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து சிவகங்கை கால்பந்துக் கழகச் செயலரும், பயிற்றுநருமான எம். சிக்கந்தா் கூறியதாவது:

கால்பந்து உலகின் பழைமையான விளையாட்டாகும். இதனால், இதை அனைவரும் விரும்பி பாா்க்கின்றனா். கடந்த 19 ஆண்டுகளாக சிவகங்கை கால்பந்துக் கழகம் சாா்பில் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறோம். 5 முதல் 17 வயது வரையுள்ள மாணவ, மாணவிகள் பயிற்சியில் சேரலாம். பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 8675216868 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.