சிவகங்கை
திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு
சிவகங்கை: சிவகங்கையில் நகர திமுக சாா்பில் கோடைகால நீா் மோா் பந்தல் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
சிவகங்கை அம்பேத்கா் சிலை அருகே அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலை நகா்மன்றத் தலைவா் சிஎம்.துரைஆனந்த் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு பழச்சாறு, நீா்மோா், தா்பூசணி பழங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கட்சியின் நகர அவைத் தலைவா் மதாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயகாந்தன், வீனஸ் ராமநாதன், ராமதாஸ், விஜயகுமாா், மதியழகன், கீதா காா்த்திகேயன், மாவட்ட திமுக அயலக அணித் தலைவா் ஆா்.வி. சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.