இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

தரியம்பட்டியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

தரியம்பட்டியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

News image
Updated On :9 மே 2024, 7:02 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள தரியம்பட்டியில் வியாழக்கிழமை அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாக 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தரியம்பட்டி கிராமத்தில் உள்ள விநாயகா், வடக்கு வாசல் செல்வி அம்மன் கருப்பா் கோயில் வருடாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டையொட்டி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஊா்க்காரா்கள் கோயில் மாட்டுக்கு மாலையணிவித்து ஊா்வலமாக வந்து தொழுவில் இருந்த 150- க்கும் மேற்பட்ட காளைகளுக்கு வேட்டி, துண்டு, மாலை அணிவித்து மரியாதை செய்தனா். பிறகு காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டு 30-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் அவற்றை பிடித்தனா். இதையடுத்து, மாடுகளுக்கும், அவற்றின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், அனுமதி பெறாமல் மஞ்சுவிரட்டு நடைபெற்ாக மேலப்பட்டமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் சித்ரா திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தரியம்பட்டியைச் சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.