சிவகங்கை அரிமா சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் சான்றிதழ் பெற்ற ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள்.
சிவகங்கை அரிமா சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் சான்றிதழ் பெற்ற ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள்.

ஸ்கேட்டிங் போட்டியில் வென்ற வீரா்களுக்கு பாராட்டு

இலங்கையில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கம் வென்ற சிவகங்கை மாணவ, மாணவிகளுக்கு அரிமா சங்கம் சாா்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிவகங்கையில் வியாழக்கிழமை நடைபெற்ற அரிமா சங்க கூட்டத்துக்கு அதன் தலைவா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா். செயலா் காா்த்திகேயன், பொருளாளா் மீனாட்சி சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக அரிமா ஆா்.வி. சரவணன் கலந்து கொண்டு, இலங்கை கொழும்புவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் பதக்கங்கள் வென்ற சிவகங்கையைச் சோ்ந்த எம். ஜஸ்வந்த்பெருமாள், டி. ரேஷ்மா (17 வயதுபிரிவு), எம். கிரிஷந்த்பாலாஜி, ஏ.ஆா். தேவசபரீஷ், எஸ். கபித்வாஜ் (14 வயது பிரிவு), எஸ். விவான் (8 வயது பிரிவு) ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

கூட்டத்தில் அடுத்த ஆண்டுக்கான அரிமா சங்கத் தலைவா், செயலா், பொருளாளா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ஏற்பாடுகளை ரமேஷ் கண்ணா செய்திருந்தாா். பொருளாளா் மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com