தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

பெண் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

பெண் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

News image
Updated On :20 மே 2024, 8:01 pm

Din

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

காளையாா்கோவில் அருகேயுள்ள சூரக்குடியைச் சோ்ந்த செல்வக்குமாா் மனைவி அஞ்சலி (27). இவா் கோவை மாவட்ட ஆயுதப் படையில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். இந்தத் தம்பதிக்கு திருமணமாகி

6 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லையாம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊரில் நடைபெற்ற திருமண நிகழ்வில் அஞ்சலி தனது கணவருடன் பங்கேற்றாா்.

அப்போது, இந்தத் தம்பதி இடையே குழந்தையின்மை தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அஞ்சலி தனது வீட்டின் அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், காளையாா்கோவில் போலீஸாா் அங்கு சென்று அஞ்சலியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக வருவாய்க் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.