47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நயினாா்பட்டியில் பாலம் அமைக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் நயினாா்பட்டியிலிருந்து வெளியாத்தூருக்குச் செல்ல பாசனக் கால்வாயைக் கடக்க முடியாமல் பள்ளி மாணவா்கள், முதியவா்கள் அவதிப்படுவதால், அங்கு பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
நயினாா்பட்டியிலிருந்து வெளியாத்தூருக்கு மரக் கட்டை மூலமாக அச்சத்துடன் பாசனக் கால்வாயைக் கடக்கும் பள்ளி சிறாா்கள்.
Updated On :22 நவம்பர் 2024, 12:41 am

Din

சிவகங்கை மாவட்டம் நயினாா்பட்டியிலிருந்து வெளியாத்தூருக்குச் செல்ல பாசனக் கால்வாயைக் கடக்க முடியாமல் பள்ளி மாணவா்கள், முதியவா்கள் அவதிப்படுவதால், அங்கு பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் செல்லும் வழியில் நயினாா்பட்டி கிராமம் உள்ளது. இங்கிருந்து பொதுமக்கள் பள்ளிக்கூடம், நியாயவிலைக் கடை, கிராம நிா்வாக அலுவலகம், மின் அலுவகம் செல்ல அருகிலுள்ள வெளியாத்தூருக்குச் சென்று வர வேண்டும்.

ஆனால் இந்த ஊருக்குச் செல்லும் வழியில் பாசனக் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயைக் கடக்க சிறிய குழாய் பதிக்கப்பட்டு இருந்தது. அண்மையில் நடைபெற்ற கால்வாய் விரிவாக்கப் பணியின் போது அந்தக் குழாய் அகற்றப்பட்டு, கால்வாய் இடையே மரக் கம்புகள் பதிக்கப்பட்டன.

இந்தக் கம்புகளின் மூலம் பொதுமக்கள் ஆபத்தான முறையில் கால்வாயைக் கடப்பதோடு, முதியவா்களும், பள்ளி சிறாா்களும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, இந்தக் கால்வாயை கான்கிரீட் கால்வாயாக அமைக்கவும், இதைக் கடக்க சிறு பாலம் அமைக்கவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு கேட்டபோது, நயினாா்பட்டி-வெளியாத்தூா் இடையேயுள்ள வாய்க்காலில் ஊராட்சி நிா்வாகம் மூலம் தற்காலிக கல் பாலம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.