நயினாா்பட்டியில் பாலம் அமைக்கக் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் நயினாா்பட்டியிலிருந்து வெளியாத்தூருக்குச் செல்ல பாசனக் கால்வாயைக் கடக்க முடியாமல் பள்ளி மாணவா்கள், முதியவா்கள் அவதிப்படுவதால், அங்கு பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.










