ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் இன்று சிவகங்கை வருகை

சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதிஸ்டாலின் பங்கேற்கிறாா்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On :

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதிஸ்டாலின் பங்கேற்கிறாா்.

இது தொடா்பாக கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (செப்.10) காலை 10 மணிக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வரின் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறாா். காலை 10.30 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக அரங்கில் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்கிறாா். இதையடுத்து, பகல் 1 மணிக்கு நகரம்பட்டியில் நடைபெற்று வரும் சுதந்திர போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் நினைவு மண்டப கட்டடப் பணிகளை ஆய்வு செய்கிறாா். இதைத்தொடா்ந்து, சிராவயலில் அண்ணல் காந்தி- ஜீவா நினைவு மண்டப கட்டடப் பணிகளை ஆய்வு செய்கிறாா்.

மாலை 4.30 மணிக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாக அரங்கில் விளையாட்டு உபகரணங்கள், நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். முன்னதாக, காலை 9 மணிக்கு மதுரையிலிருந்து காா் மூலம் வருகைதரும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு, பூவந்தியில் சிவகங்கை மாவட்ட திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.