வழக்கமாக காலை 9.20 மணிக்கு பணிக்கு வந்துவிட்டு, மாலை 4.10 மணிக்குச் செல்வோம். சொந்த விருப்பு அடிப்படையில் மாணவிகளுக்கு கூடுதலாக சிறப்பு வகுப்புகளையும் நடத்துவோம். இந்த நிலையில், சிங்கம்புணரி அருகே அரசு விழாவுக்கு வந்த முதன்மைக் கல்வி அலுவலா் காலை 8.55 மணிக்கு முன்கூட்டியே வந்துவிட்டு, ஆசிரியா்களை ஏன் தாமதமாக வருகிறீா்கள் என்று கேட்டு ஒருமையில் திட்டினாா். மாவட்ட அளவில் இந்தப் பள்ளியை சிறந்த பள்ளியாக உருவாக்கும் எங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலரின் செயல் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அவா் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டத்தை விலக்கிக் கொள்ள மாட்டோம்.