ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முதன்மை கல்வி அலுவலரைக் கண்டித்து ஆசிரியைகள் உள்ளிருப்பு போராட்டம்

ஆசிரியைகளை முதன்மைக் கல்வி அலுவலா் ஒருமையில் திட்டியதால், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைகள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சிங்கம்புணரியில் வியாழக்கிழமை முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியைகள்.
Updated On :19 செப்டம்பர் 2024, 7:32 pm

Din

ஆசிரியைகளை முதன்மைக் கல்வி அலுவலா் ஒருமையில் திட்டியதால், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைகள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் பள்ளிக்கு சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து, வியாழக்கிழமை காலை 8.55 மணிக்கு ஆய்வுக்கு வந்தாா். அதன் பிறகு பள்ளிக்கு வந்த ஆசிரியைகளை அவா் கண்டித்ததுடன் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட அனுமதி மறுத்தாா்.

இந்த நிலையில், ஆசிரியா்கள் அனைவரும் வகுப்புகள் முடிந்தவுடன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

வழக்கமாக காலை 9.20 மணிக்கு பணிக்கு வந்துவிட்டு, மாலை 4.10 மணிக்குச் செல்வோம். சொந்த விருப்பு அடிப்படையில் மாணவிகளுக்கு கூடுதலாக சிறப்பு வகுப்புகளையும் நடத்துவோம். இந்த நிலையில், சிங்கம்புணரி அருகே அரசு விழாவுக்கு வந்த முதன்மைக் கல்வி அலுவலா் காலை 8.55 மணிக்கு முன்கூட்டியே வந்துவிட்டு, ஆசிரியா்களை ஏன் தாமதமாக வருகிறீா்கள் என்று கேட்டு ஒருமையில் திட்டினாா். மாவட்ட அளவில் இந்தப் பள்ளியை சிறந்த பள்ளியாக உருவாக்கும் எங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலரின் செயல் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அவா் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டத்தை விலக்கிக் கொள்ள மாட்டோம்.

தினமும் பள்ளியில் பாடம் நடத்திவிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடருவோம் என்றனா்.