மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் முன்னிலையில் அவா் இந்த ஆய்வில் ஈடுபட்டாா். திருப்புவனம் பேரூராட்சியில் ரூ.16.52 கோடியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், மடப்புரம் கிராமத்தில் ரூ.8.40 லட்சத்தில் சமுதாய மயானத்தில் நடைபெறும் காத்திருப்போா் அறை, சுற்றுச் சுவா் கட்டுமானப் பணிகள், தூதை கிராமத்தில் ரூ.18.42 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள், திருப்பாச்சேத்தி தெற்கு நடுநிலைப் பள்ளியில் ரூ.98 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 2 தளங்கள் கொண்ட கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள், மழவராயனேந்தல் ஊராட்சி, செம்பரயநேந்தல் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பயனாளியின் இல்லம் கட்டுமானப் பணிகள் ஆகியன குறித்தும் லால்வேனா ஆய்வு மேற்கொண்டாா்.