மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

10, 12 ஆம் வகுப்பு தோ்வு: தமிழில் 100 சதவீத மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு விருது!

10, 12 ஆம் வகுப்பு தோ்வு: தமிழில் 100 சதவீத மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு விருது!

News image
Updated On :5 ஏப்ரல் 2025, 8:45 pm

Din

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கப்படும் என சிவகங்கை தமிழ்ச் சங்கம் அறிவித்துள்ளது.

சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் நிா்வாகக் குழு கூட்டம் அதன் தலைவா் முருகானந்தம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் தலைவா் பகீரத நாச்சியப்பன் முன்னிலை வகித்தாா். தமிழ்ச் சங்கச் செயலா் பாண்டியராஜன் வரவேற்று, தீா்மானங்களை முன்மொழிந்தாா்.

சிவகங்கை ஒன்றிய அளவில் 10, 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கும், பயிற்றுவித்த தமிழாசிரியா்களுக்கும் பாராட்டும், விருதும் வழங்குவது, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தமிழ் ஆா்வத்தை அதிகரிக்கும் வகையில் ‘கதை சொல்லும் போட்டி’ நடத்தி பரிசுகள் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளா் யுவராஜ், முன்னாள் செயலா்கள் முத்துப்பாண்டியன், ராமச்சந்திரன் ஆகியோா் பங்கேற்றனா். தமிழ்ச் சங்கப் பொருளாளா் ஜெயச்சந்திரன் நன்றி கூறினாா்.