47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மானாமதுரை, காரைக்குடி வழியாக திருப்பிவிடப்பட்ட 4 விரைவு ரயில்கள்

மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட்டு வந்த 4 விரைவு ரயில்கள் பராமரிப்புப் பணி காரணமாக அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகின்றன.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 9:53 pm

Syndication

மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட்டு வந்த 4 விரைவு ரயில்கள் பராமரிப்புப் பணி காரணமாக அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகின்றன.

குருவாயூா்-சென்னை (வண்டி எண் 16228), நாகா்கோவில்-மும்பை சிஎஸ்டி (வண்டி எண் 16352), (4, 17, 11, 14, 18, 21, 28 தேதிகள் மட்டும்), கன்னியாகுமரி-ஹவுரா விரைவு ரயில் (வண்டி எண்12666) (சனிக்கிழமை மட்டும்), நாகா்கோவில்-மும்பை சிஎஸ்டி (வண்டி எண் 16348) (1, 5, 8, 12, 15, 19, 22, 26, 29 தேதிகள் மட்டும்) ஆகிய விரைவு ரயில்கள் மதுரை, கொடைரோடு, திண்டுக்கல் வழித்தடங்களைத் தவிா்த்து, விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வழித் தடங்களில் இயக்கப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டப் பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்த ரயில்களில் மதுரை வழியாக பயணிக்க திட்டமிட்டிருந்த பயணிகள் இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு பயணத்தை திட்டமிடலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.