இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கண்டரமாணிக்கத்தில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் கண்டரமாணிக்கம் கிராமத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் கண்டரமாணிக்கம் கிராமத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டம், கண்டரமாணிக்கம் சேதுராணி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வருகிற சனிக்கிழமை (டிச.27) நடைபெறும் மருத்துவ முகாமில், ரூ.3 ஆயிரம் மதிப்பிலான ரத்த பரிசோதனை, இ.சி.ஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும், இலவசமாக செய்யப்படும். மேலும் காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம், நரம்பியல் மருத்துவம், மனநல மருத்துவம், சா்க்கரை நோய் மருத்துவம், நுரையீரல் நோய் மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மூலம் சிகிச்சை வழங்கப்படும்.

மேலும், கா்ப்பிணிகளுக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்படவுள்ளன. இதுமட்டுமன்றி, இந்த முகாம்களின் வாயிலாக, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ்களும் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களின் ஆதாா் அட்டையின் நகலை அவசியம் கொண்டு வரவேண்டும். பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்றாா் அவா்.