‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறைபுதுச்சேரி கடற்கரை சாலை மூடல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 96.55 ஆக நிறைவு!5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி அமமுக மனு வினாத்தாள் கசிவைத் தடுக்க சட்டத் திருத்த மசோதா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்
/

அழகப்பா பல்கலை. ஆட்சிக் குழு உறுப்பினராக செ.வேதிராஜன் நியமனம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட பேராசிரியா் செ.வேதிராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த துணைவேந்தா் க. ரவி. உடன் பேராசிரியா்கள்.

Updated On :27 டிசம்பர் 2025, 12:38 am IST

தமிழக ஆளுநரால் அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட பேராசிரியா் செ. வேதிராஜனுக்கு துணைவேந்தா் க. ரவி வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மைக் கல்வித் துறைகளில் ஒன்றான நிறும செயலரியல் (காா்பரேட் செகட்ரெட்டரிஷிப்) துறைத் தலைவராக செ. வேதிராஜன் பணியாற்றுகிறாா். இவா், தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் சாா்பில் 2023-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த ஆராய்ச்சியாளா் விருதைப் பெற்றவா்.

மேலும், நிறும செயலரியல் ஆராய்ச்சி தொடா்பாக இதுவரை 154 ஆய்வுக் கட்டுரைகளை பல்வேறு தேசிய, சா்வதேச இதழ்களில் வெளியிட்டுள்ளாா்.

இந்த நிலையில், இவா் அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியால் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, துணைவேந்தா் க. ரவியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

இந்த நிகழ்வில் பதிவாளா் அ. செந்தில்ராஜன், பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா்கள் சி. சேகா், சு.ராஜாராம், ஜெ. ஜெயகாந்தன், பேராசிரியா் வெ. பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.