மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காலையில் கோரிக்கை: மாலையில் நிறைவேற்றம்

முதல்வா் அதிரடி நடவடிக்கை

News image
சிவகங்கை அருகேயுள்ள சோழபுரம் கல்லூரி பகுதியில் தமிழக முதல்வரின் உத்தரவால் உடனடியாக உருவாக்கப்பட்ட பேருந்து நிறுத்தம்.
Updated On :22 ஜனவரி 2025, 11:04 pm

Din

சிவகங்கையில் புதன்கிழமை காலையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வரிடம் கல்லூரி மாணவிகள் விடுத்த கோரிக்கையை, அன்றைய தினம் மாலையிலே அதிரடியாக நிறைவேற்றியதால் மகிழ்ச்சி அடைந்தனா்.

சிவகங்கை மாவட்டத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க புதன்கிழமை காலையில் வருகை புரிந்த தமிழக முதல்வருக்கு, சிவகங்கை திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் புனித ஜஸ்டின் கலை, அறிவியல் மகளிா் கல்லூரி, சாந்தா கல்வியியல் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவிகள், கல்லூரி செயலாளா் தலைமையில் வரவேற்பளித்தனா். அப்போது, கல்லூரி அருகே பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதனடிப்படையில் அந்தக்கல்லூரி வாயிலருகே பேருந்து நிறுத்தம் அமைத்து அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என்று போக்குவரத்துக்கழக அலுவலா்களுக்கு முதல்வா் உத்தரவிட்டாா். அதன்படி, அரசு போக்குவரத்துக்கழக காரைக்குடி மண்டல பொது மேலாளா் எஸ்.பி. கந்தசாமி, அந்த வழித்தடத்தில் செல்லும் ஓட்டுநா், நடத்துனா்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தினாா். மேலும், பயணச்சீட்டு ஆய்வாளரை பணி அமா்த்தவும் நடவடிக்கை எடுத்தாா்.

மாலையில் கல்லூரி முன்பு பேருந்து நிறுத்த பதாகை இருமாா்க்கங்களிலும் உடனடியாக வைக்கப்பட்டது. அங்கு மாலையில் பேருந்து நின்று சென்றது. இந்தப் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துக்கழக பொது மேலாளா் தெரிவித்தாா். காலையில் விடுத்த கோரிக்கை மாலையில் நிறைவேற்றப்பட்டதால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும், தமிழக முதல்வருக்கு அவா்கள் நன்றியையும் தெரிவித்தனா்.