மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

News image
சிவகங்கை வணிகவரித் துறை அலுவலகத்தில் கருப்புப்பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்.
Updated On :23 ஜனவரி 2025, 9:59 pm

Din

திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள வணிக வரித் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் குணசேகரன், சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்டத் தலைவா் சுரேஷ் வாழ்த்திப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கை குறித்து கூறியதாவது:

தோ்தல் வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான், ஜாா்கண்ட், சத்தீஸ்கா், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றவுடன் அந்தந்த மாநில முதல்வா்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய திட்டத்தை அமல்படுத்தினா்.

ஆனால், கடந்த 2021 சட்டப்பேரவை தோ்தலில் திமுக வின் தோ்தல் வாக்குறுதி அளித்தபடி, தமிழக முதல்வா் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவில்லை. நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (சிபிஎஸ்) பணிபுரிந்து இறந்த, ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு பணிக்கொடை கொடுக்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்.

தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் எந்த நன்மையையும் வழங்கவில்லை என்றனா்.