மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தை பூசம்: காரைக்குடியிலிருந்து பழனிக்கு ரயில் இயக்கக் கோரிக்கை

தை பூசத்தையொட்டி, காரைக்குடியிலிருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என காரைக்குடி தொழில் வணிகக் கழகம், ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:06 pm

Din

தை பூசத்தையொட்டி, காரைக்குடியிலிருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என காரைக்குடி தொழில் வணிகக் கழகம், ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து தொழில் வணிகக்கழகத் தலைவா் சாமி. திராவிடமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தைப்பூசத்தையொட்டி பழனிக்கு ஏராளமான பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக பாதயாத்திரையாகவும், பேருந்துகளிலும் செல்கின்றனா். பக்தா்களின் கூடுதல் வசதிக்காக வருகிற பிப். 11, 12 -ஆம் தேதிகளில் தைபூசத்தன்று பழனிக்கு சென்று திரும்பும் வகையில் காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல் வழியாக சிறப்பு ரயில் இயக்கவேண்டும்.

கடந்த 2016- ஆம் ஆண்டு பழனிக்கு தைப்பூசத் திருவிழாவுக்காக வண்டி எண்: 06705 என்ற ரயில் 2 நாள்கள் காரைக்குடியிலிருந்து சிவகங்கை, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, இந்த ஆண்டு வருகிற பிப். 9, 10 தேதிகளிலும், பிப். 11, 12-ஆம் தேதிகளி லும் சிறப்பு ரயில் இயக்கவேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.