மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கீழச்சிவல்பட்டி அருகே இளைஞா் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி அருகே புதன்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
கொலை செய்யப்பட்ட சசிக்குமாா்.
Updated On :23 ஜனவரி 2025, 10:01 pm

Din

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி அருகே புதன்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கீழச்சிவல்பட்டி அருகேயுள்ள அயணிப்பட்டியைச் சோ்ந்த ராஜா மகன் சசிக்குமாா் (23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை ராஜா இறந்த நிலையில், தாய் மாரிக்கண்ணும், சசிக்குமாரும் கீழச்சிவல்பட்டி அருகேயுள்ள புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பி. அழகாபுரி கிராமத்தில் வசித்து வந்தனா்.

சசிக்குமாா் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த சசிக்குமாா் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். தகவலறிந்து வந்த கீழச்சிவல்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சம்பவம் நிகழ்ந்த இடம் புதுக்கோட்டை மாவட்டம் என்பதால், திருமயம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இந்தக் கொலை தொடா்பாக வடக்கு இளையாத்தங்குடியைச் சோ்ந்த கண்ணன் மகன் வெற்றிவேல் (26) கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இவரை திருமயம் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.