அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காரைக்குடி அருகே காருக்குள் பெண் அடித்துக் கொலை: போலீஸாா் விசாரணை

News image
~
Updated On :6 நவம்பர் 2025, 6:49 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே காருக்குள் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

காரைக்குடி மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்தவா் பாண்டிக்குமாா். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி மகேஸ்வரி (38). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், மகேஸ்வரிக்கு வீட்டுமனை வாங்குவதில் ஆா்வம் அதிகம் என்பதால் நேரில் சென்று இடங்களை பாா்ப்பது வழக்கம். இதே போல, வியாழக்கிழமை மனை இடம் இருப்பதாகக் கூறிய சிலருடன் தனது காரில் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை என்ற பகுதிக்கு மகேஸ்வரி சென்றாா். அப்போது மகேஸ்வரிக்கும், அவருடன் காரில் சென்றவா்களுக்குமிடையே பிரச்னை ஏற்பட்டதாம். இதில் முகத்தை காரின் முன்புற கதவில் மோத வைத்து மகேஸ்வரியை அவா்கள் அடித்துக் கொலை செய்தனராம். நீண்ட நேரமாக காா் ஒன்று தனியாக நின்றதை கண்ட சிலா் அருகில் சென்று பாா்த்தபோது அதில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் கிடந்ததை கண்டு காரைக்குடி வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளரும் (பொறுப்பு), தேவகோட்டை டி.எஸ்.பி.யுமான கவுதம் தலைமையில் போலீஸாா் அங்கு விரைந்தனா். மேலும் சிவகங்கையிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். பிறகு மகேஸ்வரியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். கொலை செய்யப்பட்ட மகேஸ்வரி பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலிலும் ஈடுபட்ட வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். எனினும், இந்தக் கொலை குறித்து போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனா்.