இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பாலதண்டாயுதபாணி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 1:14 am

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பாலதண்டாயுதபாணி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய பாலுமுத்து கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றாா். இதையடுத்து மாவட்டக் கல்வி அலுவலா் மாரிமுத்து கூடுதல் பொறுப்பாக முதன்மைக் கல்வி அலுவலா் பணியையும் கவனித்து வந்தாா்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட முன்மைக் கல்வி அலுவலராக இருந்த பாலதண்டாயுதபாணி, சிவகங்கைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து அவா் வியாழக்கிழமை சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றாா்.