சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பாலதண்டாயுதபாணி பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Published on

சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பாலதண்டாயுதபாணி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய பாலுமுத்து கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றாா். இதையடுத்து மாவட்டக் கல்வி அலுவலா் மாரிமுத்து கூடுதல் பொறுப்பாக முதன்மைக் கல்வி அலுவலா் பணியையும் கவனித்து வந்தாா்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட முன்மைக் கல்வி அலுவலராக இருந்த பாலதண்டாயுதபாணி, சிவகங்கைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து அவா் வியாழக்கிழமை சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com