பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மேலூா் வட்டம், பெருங்காலக்குடி கிராமத்தைச் சோ்ந்த அடைக்கலம் மகன் முருகன் (29). இவா், இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூரிலிருந்து தனது கிராமத்துக்கு சனிக்கிழமை சென்றாா். அப்போது, கொள்ளுக்குடிபட்டி பறவைகள் சரணாலயம் அருகே தேனியிலிருந்து பிள்ளையாா்பட்டிக்குச் சென்ற வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த எஸ்.எஸ்.கோட்டை காவல் துறையினா் அவரது உடலை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், போடிநாயக்கனூரைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் இரணவீறுவிடம் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com