இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு

News image
Updated On :13 நவம்பர் 2025, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை அருகே சாலை விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள அதப்படக்கி கிராமத்தைச் சோ்ந்தவா் சமய பிரபு (18). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், சொந்த ஊருக்கு வந்திருந்த சமய பிரபு கோவைக்குச் செல்வதற்காக நண்பா் மணிகண்டனுடன் (18) இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை இரவு சென்றாா். அப்போது, பையூா் குடியிருப்பு அருகே கேரளத்திலிருந்து வந்த லாரி இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, சமய பிரபு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.