அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சாலைப் பணிகள் விரைவில் நிறைவடையும்: நகா் மன்றத் தலைவா்

மானாமதுரையில் எஸ்.மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெற்ற நகா் மன்றக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:42 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகரில் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவடையும் என நகா் மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா்.

மானாமதுரை நகா் மன்றக் கூட்டம் அதன் தலைவா் மாரியப்பன் கென்னடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் பாலசுந்தரம், ஆணையா் கோபாலகிருஷ்ணன், பொறியாளா் பட்டுராஜன், மேலாளா் பாலகிருஷ்ணன், வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியதாவது:

மானாமதுரை நகரில் கழிவுநீா் வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும். வைகை ஆற்றுக்குள் ஈமச்சடங்குகள் செய்ய தண்ணீா் தொட்டிகள் அமைக்க வேண்டும். நகராட்சிப் பகுதியில் அனைத்து வீதிகளிலும் அமைக்கப்படும் சாலைகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். நகரில் குப்பைக் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணிகளைக் கண்காணிக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து, தலைவா் மாரியப்பன் கென்னடி பதிலளித்துப் பேசியதாவது:

நகரில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் கண்காணிக்கப்பட்டு, தரமான முறையில் சாலைகளை அமைக்க ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தப்படும். சாலை அமைக்கப்பட்ட பகுதிகள் தவிர எஞ்சியுள்ள பகுதிகளில் விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி முடிக்கப்படும். கழிவு நீா் வாய்க்கால்கள் அமைப்பதற்கு நிதி கோரப்பட்டுள்ளது. கிடைத்தவுடன் அந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

ஆணையா் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ஒவ்வொரு வாா்டுக்கும் நேரடியாகச் சென்று, ஆய்வு செய்து அந்தப் பகுதியில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.