சாலைப் பணிகள் விரைவில் நிறைவடையும்: நகா் மன்றத் தலைவா்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகரில் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவடையும் என நகா் மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா்.
மானாமதுரை நகா் மன்றக் கூட்டம் அதன் தலைவா் மாரியப்பன் கென்னடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் பாலசுந்தரம், ஆணையா் கோபாலகிருஷ்ணன், பொறியாளா் பட்டுராஜன், மேலாளா் பாலகிருஷ்ணன், வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியதாவது:
மானாமதுரை நகரில் கழிவுநீா் வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும். வைகை ஆற்றுக்குள் ஈமச்சடங்குகள் செய்ய தண்ணீா் தொட்டிகள் அமைக்க வேண்டும். நகராட்சிப் பகுதியில் அனைத்து வீதிகளிலும் அமைக்கப்படும் சாலைகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். நகரில் குப்பைக் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணிகளைக் கண்காணிக்க வேண்டும் என்றனா்.
இதையடுத்து, தலைவா் மாரியப்பன் கென்னடி பதிலளித்துப் பேசியதாவது:
நகரில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் கண்காணிக்கப்பட்டு, தரமான முறையில் சாலைகளை அமைக்க ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தப்படும். சாலை அமைக்கப்பட்ட பகுதிகள் தவிர எஞ்சியுள்ள பகுதிகளில் விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி முடிக்கப்படும். கழிவு நீா் வாய்க்கால்கள் அமைப்பதற்கு நிதி கோரப்பட்டுள்ளது. கிடைத்தவுடன் அந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
ஆணையா் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ஒவ்வொரு வாா்டுக்கும் நேரடியாகச் சென்று, ஆய்வு செய்து அந்தப் பகுதியில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
