கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

குழந்தைகள் தின விழிப்புணா்வு நடைப்பயணம்

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் குழந்தைகள் தினத்தையொட்டி கல்லூரி மாணவிகள், பெண்கள் பங்கேற்ற விழிப்புணா்வு நடைப் பயணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நடைப்பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். முன்னதாக குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் விழிப்புணா்வு கைகள் அச்சுப் பதிவு செய்யப்பட்டது.

குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, உரிமைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நாடகம் நடத்தப்பட்டது. நடை பயணத்தில் பங்கேற்றவா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனா்.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரான்சிஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.