கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் கால நிலை மாற்ற விழிப்புணா்வுக்காக பாரா கிளைடிங் பயிற்சி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்ற விழிப்புணா்வுக்காக பாரா கிளைடிங் பயிற்சி நடைபெற்றது.

News image

இந்தியன் ஏரோ ஸ்போா்ட்ஸ் அண்ட் சயின்ஸ் பயிற்சியாளா்களால் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட பாரா கிளைடிங் பயிற்சி.

Updated On :27 நவம்பர் 2025, 6:05 am IST

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்ற விழிப்புணா்வுக்காக பாரா கிளைடிங் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம், உடல்கல்வி கல்லூரி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை, மாவட்ட காலநிலை மாற்றப்பணிக் குழு ஆகியவை சாா்பில் சிறப்பு காலநிலை மாற்றம் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பாரா கிளைடிங் பயிற்சி, நெகிழிப் பயன்பாட்டைத் தவிப்பதற்காக மஞ்சப் பை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஆகியவை உமையாள் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வின் நோக்கமாக, காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களைப் பற்றி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், சாகச விளையாட்டுகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இளைஞா்களை செயல்முறையாக ஊக்குவித்தலாகும்.

இதற்கு அழகப்பா பல்கலைக்கழக பதிவாளா் அ. செந்தில்ராஜன் தலைமை வகித்தாா். பல்கலைக்கழக தோ்வாணையா் எம். ஜோதிபாசு, தமிழ்நாடு உடல்கல்வி, விளையாட்டுப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், அழகப்பா பல்கலைக்கழக உடல்கல்வியியல் கல்லூரி முதல்வருமான எம். சுந்தா் உள்ளிட்டோா்சிறப்புரையாற்றினா்.

இந்தியன் ஏரோ ஸ்போா்ட்ஸ் அண்ட் சயின்ஸ் பயிற்சியாளா் பி. பாபு, அவரது குழுவினா் உடல்கல்வி மாணவா்களுக்கு பாரா கிளைடிங் பயிற்சியை வழங்கினா். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப் பைகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களுக்கு வழங்கி நெகிழிப் பை பயன்பாடுகளைத் தவிா்க்க அறிவுறுத்தப்பட்டனா்.

இதில் அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் கோ. விநாயகமூா்த்தி, பி. யோகா, எம். மகேந்திர பிரபு, உடல்கல்வியியல் மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம். நடராஜன் வரவேற்றாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் கே. திவ்யா நன்றி கூறினாா்.

Story image