பாரா தடகளப் போட்டி: பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா
சா்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பெங்களூரில் நடைபெற்ற சா்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கௌதமன் இளங்கோவன், மனோஜ் ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கிய ஸ்டாா் குரூப் பவுண்டேஷன் நிறுவனத் தலைவா் குருசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலா் முருகன். உடன் பயிற்சியாளா் ஜெ.ரஞ்சித்குமாா்.








